அஃப்ராவிற்கு..
அதியற்புதமான மூன்று கனவுகளைக்
கைக்கொண்டிருந்த வாரத்தில்
ஸ்கூலுக்கு போகவேண்டி
அடம் பிடித்து எழுப்பிய
அம்மாவினால் ஒன்றையும்
பிடித்த இசை கேட்டு
சிரித்தெழுந்ததில் ஒன்றையும்
மறந்தவளின்
மூன்றாவது கனவை
மயில் தோகை குட்டி போட
உதவுமென்று
புத்தகத்தில் பத்திரப்படுத்தினாள்.