இலையுதிர்க் காட்டுமரங்கள்

. செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
  • Agregar a Technorati
  • Agregar a Del.icio.us
  • Agregar a DiggIt!
  • Agregar a Yahoo!
  • Agregar a Google
  • Agregar a Meneame
  • Agregar a Furl
  • Agregar a Reddit
  • Agregar a Magnolia
  • Agregar a Blinklist
  • Agregar a Blogmarks


இலையுதிர் காலம் என்று
என்னால் நம்பப்பட்ட ஒரு பொழுதில்
தெரியாமல் சொட்டியிருந்த அன்பாய்
சுவரை ஒட்டி வளர்ந்த மரமானவளமிடமிருந்து
வெடித்துக் கிளம்புகின்ற பக்கக்கிளையில்
பசுமையாய் தளிர்கள் இலைகளாய் துளிர்க்கின்றன
தண்டுகள் முழுக்க அரும்பியிருந்தன பூக்கள்
ரசனைக்குட்படுத்தப்படாத வளர்ச்சியின் மீதமாய்
எனக்கென மிச்சமாய் கிடைத்திருந்தது
மிகைப்படுத்தப்பட்ட அன்பு

காடுகள்தோறும் வீசியெறிந்திருந்த
அன்பின் வடிகால்கள்
கை முளைத்து கால் விரித்து
வேர்களின் ஈரம் உறிஞ்சிக்கொண்டிருந்தன.
பற்றுதல்களுக்கான தேடலில்
எல்லைத் தாண்டி நகர்கின்றன மரங்கள்

மரமாய் இருப்பதிலான அற்புதங்கள் குறித்து
சிறகு ஒடுங்கி அமர்ந்திருந்த
பறவையொன்று
கிளையில் அமர்ந்து உபதேசித்துக்கொண்டிருந்தது.

ஓவியம்: பதிவர் முத்துலட்சுமி